Friday, July 31, 2020

#வரலட்சுமி நோன்பின் சிறப்பும் வரலட்சுமி பூஜை செய்யும் முறையும்

🌺🌺இனிய வரலட்சுமி தின வாழ்த்துக்கள் 
அனைவருக்கும் அன்னையின் திருவருளால் மங்களங்கள் உண்டாகட்டும்🌺🌺

🌺மங்கள வாழ்வு தரும்  குங்கும பிரசாதம் 

🌺அம்பாளுக்கு சர்வமங்களா என்று ஒரு திருநாமம் உண்டு. அனைத்து மங்கலங்களையும் அருளும் தேவி. மங்கலங்கள் அருளும் அம்பிகையின் திருமேனியில் இருந்து தோன்றியதுதான் மஞ்சள். அந்த மஞ்சளில் இருந்து தோன்றியதுதான் குங்குமம்.
பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது.

 🌺குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால்,பிரம்மராட்சஸ் போன்ற ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.     
சிவபெருமானுக்கு விபூதி ஐஸ்வர்யமாகத் திகழ்வதுபோல், அம்பிகைக்கு குங்குமம் ஐஸ்வர்யமாக திகழ்கிறது. 

🌺அம்பிகையின் அருட்பிரசாதமான குங்குமத்தில் அம்பாளின் துவாரசக்திகளான ஜெயா, விஜயா ஆகியோர் இருப்பதாக ஐதீகம். எனவே நெற்றியில் குங்குமம் தரித்துக்கொண்டால், அவ்விருவரும் தேவிக்குக் காவலாக இருப்பதைப் போலவே, 
நமக்கும் காவலாக இருந்து சகலவிதமான ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றுவார்கள் என்பது உறுதி.

🌺அம்பிகையின் மேன்மையான அருட்பிரசாதமான குங்குமத்தை அணிந்துகொண்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்பதை,
 ‘சர்வ_பாபேப்ர_முச்யதே’என்று காமிகா ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. 
அம்பிகைக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு, அர்ச்சனை குங்குமத்தைப் பிரசாதமாகப் பெற்று அணிந்துகொண்டால், வீட்டில் அனைத்து மங்கலமும் ஏற்படுவதுடன் ஐஸ்வர்யங்களுக்கும் குறைவே இருக்காது.

🌺நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை 

🌺பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.
 குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. 
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. 
கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். 

🌺 வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

*🌺பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

🌺 அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

🌺 தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

🌺திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.

 🌺ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

🌺குங்குமம் தரிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

"மங்களங்களுக்கெல்லாம் மங்களம் அளிப்பதாயும் இங்கு நோய் விஷங்கள் தீமை எல்லாமும் ஒழிப்பதாயும்
 சங்கரி லலிதா தேவி தாயுருவாயும் உள்ள 
குங்குமம் தரிப்பவர்க்கு குறையற நன்மையாமே"*

இத்தனை மகிமைகள் நிறைந்த குங்குமத்தை நாமும் தினமும் அணிந்து அன்னையின் திருவருளை பெறுவோமே!

ஓம் சக்தி 🙏
பராசக்தி 🙏

No comments:

Post a Comment

ரவீந்தர் கௌஷிக்

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை ...